புதன், 9 மே, 2012

                                 திருக்குறள்

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு." (திருக்குறள் - 423)



பழந்தமிழ் நூல்களில் நான்கு பெரும் பகுப்புக்கள் உள்ளன. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவை அடங்கிய பதினென்மேல்கணக்கு, பதினென்கீழ்க்கணக்கு, ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள். இவற்றில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு திருக்குறள் விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் "முப்பால்" எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களை தன்னுள் அடக்கியது. இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. அக்காலத்தில் இவ்வகை வெண்பாக்களால் ஆகிய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.

        “பாயிரம்” என்னும் பகுதியுடன் முதலில் “அறத்துப்பால்” வருகிறது. அதிலும் முதலில் காணப்படுவது , “கடவுள் வாழ்த்து” என்னும் அதிகாரம். தொடர்ந்து, “வான் சிறப்பு”, “நீத்தார் பெருமை”, “அறன் வலியுறுத்தல்”, ஆகிய அதிகாரங்கள்.

         அடுத்துவரும் “இல்லறவியல்” என்னும் இயலில் 25 அதிகாரங்கள்; அடுத்துள்ள துறவறவியலில் 13 அதிகாரங்களுடன் முதற்பாலாகிய அறத்துப்பால் பகுதி முடிவுறுகிறது.

         அடுத்து வரும் “பொருட்பாலி”ல் அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் ஆகிய இயல்கள் இருக்கின்றன. அரசு இயலில் 25 அதிகாரங்கள் உள்ளன. அமைச்சு இயலில் 32 அதிகாரங்களும், ஒழிபு இயலில் 13 அதிகாரங்களும் உள்ளன.

         கடைசிப்பாலாகிய “இன்பத்துப்பால்” அல்லது “காமத்துப்பாலி”ல் இரண்டு இயல்கள்; களவியலில் 7 அதிகாரங்களும், கற்பியலில் 18 அதிகாரங்களும் உள்ளன. ஆகமொத்தம் 7 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள்.

        திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் வள்ளுவர் பாடியுள்ளார். ஆனால் இவற்றில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன.     

                    “கர முதல வெழுத்தெல்லாம் ஆதி  
                      பகவன் முதற்றே யுலகு….”
என்று தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்தாகிய “அ” வில் ஆரம்பித்து, 1330 ஆம் குறளாகிய,
 
                     “ஊடுதல் காமத்திற்கின்பம்; அதற்கின்பம்,
                       கூடி முயங்கப்பெறின்
என்று தமிழ் மொழியின் கடைசி எழுத்தாகிய “ன்” னுடன் முடித்திருக்கிறார்.

         வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை.

         பழங்காலத்தில் இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர்.

        திருக்குறள் உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுவரை 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

    அறத்துப்பால்

    பாயிரவியல்

  1. கடவுள் வாழ்த்து
  2. வான்சிறப்பு
  3. நீத்தார் பெருமை
  4. அறன் வலியுறுத்தல்
  5. இல்லறவியல்

  6. இல்வாழ்க்கை
  7. வாழ்க்கைத் துணைநலம்
  8. புதல்வரைப் பெறுதல்
  9. அன்புடைமை
  10. விருந்தோம்பல்
  11. இனியவைகூறல்
  12. செய்ந்நன்றி அறிதல்
  13. நடுவு நிலைமை
  14. அடக்கமுடைமை
  15. ஒழுக்கமுடைமை
  16. பிறனில் விழையாமை
  17. பொறையுடைமை
  18. அழுக்காறாமை
  19. வெஃகாமை
  20. புறங்கூறாமை
  21. பயனில சொல்லாமை
  22. தீவினையச்சம்
  23. ஒப்புரவறிதல்
  24. ஈகை
  25. புகழ்
  26. துறவறவியல்

  27. அருளுடைமை
  28. புலான்மறுத்தல்
  29. தவம்
  30. கூடாவொழுக்கம்
  31. கள்ளாமை
  32. வாய்மை
  33. வெகுளாமை
  34. இன்னாசெய்யாமை
  35. கொல்லாமை
  36. நிலையாமை
  37. துறவு
  38. மெய்யுணர்தல்
  39. அவாவறுத்தல்
  40. ஊழியல்

  41. ஊழ்
  42. பொருட்பால்

    அரசியல்

  43. இறைமாட்சி
  44. கல்வி
  45. கல்லாமை
  46. கேள்வி
  47. அறிவுடைமை
  48. குற்றங்கடிதல்
  49. பெரியாரைத் துணைக்கோடல்
  50. சிற்றினஞ்சேராமை
  51. தெரிந்துசெயல்வகை
  52. வலியறிதல்
  53. காலமறிதல்
  54. இடனறிதல்
  55. தெரிந்துதௌiதல்
  56. தெரிந்துவினையாடல்
  57. சுற்றந்தழால்
  58. பொச்சாவாமை
  59. செங்கோன்மை
  60. கொடுங்கோன்மை
  61. வெருவந்தசெய்யாமை
  62. கண்ணோட்டம்
  63. ஒற்றாடல்
  64. ஊக்கமுடைமை
  65. மடியின்மை
  66. ஆள்வினையுடைமை
  67. இடுக்கண் அழியாமை
  68. அமைச்சியல்

  69. அமைச்சு
  70. சொல்வன்மை
  71. வினைத்தூய்மை
  72. வினைத்திட்பம்
  73. வினைசெயல்வகை
  74. தூது
  75. மன்னரைச் சேர்ந்தொழுதல்
  76. குறிப்பறிதல்
  77. அவையறிதல்
  78. அவையஞ்சாமை
  79. அங்கவியல்

  80. நாடு
  81. அரண்
  82. பொருள்செயல்வகை
  83. படைமாட்சி
  84. படைச்செருக்கு
  85. நட்பு
  86. நட்பாராய்தல்
  87. பழைமை
  88. தீ நட்பு
  89. கூடாநட்பு
  90. பேதைமை
  91. புல்லறிவாண்மை
  92. இகல்
  93. பகைமாட்சி
  94. பகைத்திறந்தெரிதல்
  95. உட்பகை
  96. பெரியாரைப் பிழையாமை
  97. பெண்வழிச்சேறல்
  98. வரைவின்மகளiர்
  99. கள்ளுண்ணாமை
  100. சூது
  101. மருந்து
  102. ஒழிபியல்

  103. குடிமை
  104. மானம்
  105. பெருமை
  106. சான்றாண்மை
  107. பண்புடைமை
  108. நன்றியில்செல்வம்
  109. நாணுடைமை
  110. குடிசெயல்வகை
  111. உழவு
  112. நல்குரவு
  113. இரவு
  114. இரவச்சம்
  115. கயமை
  116. காமத்துப்பால்

    களவியல்

  117. தகையணங்குறுத்தல்
  118. குறிப்பறிதல்
  119. புணர்ச்சிமகிழ்தல்
  120. நலம்புனைந்துரைத்தல்
  121. காதற்சிறப்புரைத்தல்
  122. நாணுத்துறவுரைத்தல்
  123. அலரறிவுறுத்தல்
  124. கற்பியல்

  125. பிரிவாற்றாமை
  126. படர்மெலிந்திரங்கல்
  127. கண்விதுப்பழிதல்
  128. பசப்பறுபருவரல்
  129. தனிப்படர்மிகுதி
  130. நினைந்தவர்புலம்பல்
  131. கனவுநிலையுரைத்தல்
  132. பொழுதுகண்டிரங்கல்
  133. உறுப்புநலனழிதல்
  134. நெஞ்சொடுகிளத்தல்
  135. நிறையழிதல்
  136. அவர்வயின்விதும்பல்
  137. குறிப்பறிவுறுத்தல்
  138. புணர்ச்சிவிதும்பல்
  139. நெஞ்சொடுபுலத்தல்
  140. புலவி
  141. புலவி நுணுக்கம்
  142. ஊடலுவகை

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

எனது வலைபதிவு அறிமுகம்

வலைபதிவு ஒன்றை உருவாக்கி அதில் நானும் நிறைய எழுத வேண்டும் என்று நீண்ட நாட்களாக இருந்து வந்த கனவு இன்று நிறைவேறி உள்ளதை இட்டு மகிழ்ச்சி அடைகின்றேன்.